Home

Do You Want More Songs and Videos? Search Here...

Kavithai - 1




Really Nice Lines.... one of my friend forward this Kavithai....... I like very much....  



உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட..
என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை
என்னை, ஏனென்றால் உன்னை காதலிக்க
எனக்கு பிடித்திருப்பதால்...!!!!!!

நீ காதல் செய்ய மறுப்பதால் எனக்கும் கூடத்தான்
கவிதை எழுத பிடிக்கவில்லை....
ஆனாலும் தொடர்கிறேன் ஏனென்றால்..
என் கவிதைகள் எல்லாம் உனக்கு பிடிப்பதால்....!!!!

பெரிதாக ஒன்றும் சிந்திப்பதில்லை நான்
எந்தக்கவிதை எழுத தொடங்கும் போதும்...
ஆனால் எழுதி முடித்து பார்க்கையில்
ஒரு சிறப்பான கவிதைக்குரிய சாயலிலே
முடிகிறது என் எல்லாக் கவிதையும்....

எப்படி சிறப்பு பெறாமல் இருக்கும்?? என்
எண்ணம் எல்லாம் வண்ணம் பூசி
உலா வரும் தேவதை நீயாக இருக்கையில்..!!!!

என் கவிதைகளை படித்தவர்களில்
பெரும்பாலோனோர் சொல்கிறார்கள்
என் கவிதைகளில் ஏதோ ஒரு வித
வித்தியாசத்தை உணர்வதாக....!!!!!

அவர்கள் சொல்வதும் உண்மைதான்
இருக்கலாம் இல்லை என்றால் வித்தியாசமான
உன்னை காதலியாய் தேர்வு செய்திருப்பேனா..???

ஒரு வித்தியாசத்திற்கு இன்று நீ ஒரு கவிதை
சொல் எனக்காக பார்க்கலாம்..
என்று நான் சொல்கையில்....
மெல்ல சிணுங்கி மெலிதாய் சிரித்தவாறே..
சொன்னாயே எனக்கும் சேர்த்து நீயே சொல்லிவிடேன்
என்று செல்லமாக கெஞ்சி..!!!

அந்த சிணுங்கலிலும், கெஞ்சலிலும் இருந்து தானடி
ஆரம்பமாகிறது என் அடுத்த கவிதைக்கான முதல்வரி...!!!!!